நடிகை ஶ்ரீ தேவிக்கு கூட அம்மாநில அரசு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர் ஆனால் எஸ்பிபிக்கு..!- பாரதிராஜா

 

நடிகை ஶ்ரீ தேவிக்கு கூட அம்மாநில அரசு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர் ஆனால் எஸ்பிபிக்கு..!- பாரதிராஜா

உடல்நலக்குறைவால் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி-யின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் பாரதிராஜா, இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் எஸ்பிபி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

நடிகை ஶ்ரீ தேவிக்கு கூட அம்மாநில அரசு தேசியக்கொடி போர்த்தி மரியாதை செலுத்தினர் ஆனால் எஸ்பிபிக்கு..!- பாரதிராஜா

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா, “நடிகை ஶ்ரீ தேவிக்கு கூட அந்த மாநிலத்தில் அரசு மரியாதையாக தேசிய கொடியை அவர் மீது போர்த்தினார்கள். பத்மஶ்ரீ, பத்ம பூஷன் மற்றும் கின்னஸ் சாதனை படைத்த எஸ்பிபிக்கு நமது அரசு அந்த வகையில் மரியாதை செய்யாதது வருத்தம் அளிக்கிறது. மண் உள்ளவரை, வான் உள்ளவரை காற்று உள்ளவரை பாலு நிலைத்திருப்பான்; தமிழக அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்வது வரவேற்புக்குரியது” எனக் கூறினார்.