அக்டோபர் 5ம் தேதி முதல் ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை!

 

அக்டோபர் 5ம் தேதி முதல் ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை!

சென்னை உயர்நீதிமன்றத்தின் கீழ் இருக்கும் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்த நிர்வாகக் குழு முடிவெடுத்திருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து நீதிமன்றங்கள் செயல்படவில்லை. முக்கியமான வழக்குகள் மட்டும் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால், சென்னை உயர்நீதிமன்றத்திலும் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் கீழமை நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணை நடத்தப்படும் என கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியானது.

அக்டோபர் 5ம் தேதி முதல் ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை!

அதன் படி கடந்த மாதம் 7ம் தேதியில் இருந்து சென்னை ஐகோர்ட்டில் நேரடி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐகோர்ட்டின் கீழ் செயல்படும் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி வழக்கு விசாரணை நடத்த தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாகக்குழு தீர்மானம் செய்திருக்கிறது. வரும் அக்டோபர் 7ம் தேதியில் இருந்து நேரடி விசாரணை தொடங்குவது குறித்து நீதிபதிகள் அனைவரிடமும் கருத்து கேட்ட பிறகு, முடிவெடுக்கப்படும் என்றும் இது தொடர்பான அறிவிப்பு வரும் வியாழக்கிழமை வெளியாகும் என்றும் அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.