வரும் 6 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமா? எனக்கு அழைப்பு வரல- பதறிய திண்டுக்கல் சீனிவாசன்

 

வரும் 6 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமா? எனக்கு அழைப்பு வரல- பதறிய திண்டுக்கல் சீனிவாசன்

சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 6ஆம் நடைபெறும் என வெளியான தகவல் பொய்யானது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாடி, முள்ளிப்பாடி ஆகிய பகுதிகளில் அடிப்படை வசதிகளான கழிவு நீரோடை, சிமெண்ட் சாலை, சிறிய பாலம் போன்ற பணிகளுக்கான பூமி பூஜை இன்று5 மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன், “சென்னையில் வருகின்ற ஆறாம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் எம்எல்ஏவான தனக்கு இதுவரை ஆறாம் தேதி கூட்டம் நடப்பது தொடர்பான தகவல் கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து இதுவரை வரவில்லை” எனக் கூறினார்.

வரும் 6 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமா? எனக்கு அழைப்பு வரல- பதறிய திண்டுக்கல் சீனிவாசன்

தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின் இடையில், உங்களது சந்தேகங்களைத் தீர்ப்பதற்காக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு போன் செய்து பேசுகிறேன் எனக்கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அனைவரின் முன்னிலையிலும் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு போன் செய்து விசாரித்தார். அப்போது ஆறாம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக கட்சி தலைமையிலிருந்து சமூக வலைதளங்களில் திவு செய்யவில்லை. அது தவறான தகவல் என தெரிவித்தனர். உங்களது முன்னிலையில்தான் கட்சித் தலைமைக்கு போன் செய்து பேசினேன் எனவே அது பொய்யான தகவல் என செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தார்.