சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை- இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

 

சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை- இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்னர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தீர்த்த கவுண்டன் வலசு பகுதியை சேர்ந்தவர் ராம்குமார் (23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ராம்குமாருக்கு, மற்றொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால், திருமணத்திற்கு பிறகும் அவர் சிறுமியுடன் தொடர்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சிறுமி மாயமாகி உள்ளார்.

சிறுமியை கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை- இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கள்ளிமந்தையம் காவல் நிலைய போலீசார் விசாரித்து வந்தனர். அதில், சிறுமியை ராம்குமார் கடத்திச்சென்றது தெரியவந்தது. உறவினர் இல்லத்தில் பதுங்கியிருந்த இருவரையும் மடக்கிப்பிடித்த போலீசார், சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ராம்குமார் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து, ஒட்டன்சத்திரம் மகளிர் காவல்நிலைய போலீசாரிடம் ராம்குமார் ஒப்படைக்கப்பட்டார். அங்கு போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து ராம்குமாரை கைதுசெய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.