“அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்”- திண்டுக்கல் சீனிவாசன்

 

“அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்”-  திண்டுக்கல் சீனிவாசன்

முதல்வர் வேட்பாளர் யார்? என்று அதிமுகவில் இபிஎஸ் – ஓபிஎஸ் என இரு தரப்பினரும் மல்லுக்கட்டி வரும் பரபரப்பான சூழலில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி, வரும் அக்டோபர் 7ம் தேதி அன்று அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அக்டோபர் மாதம் 7ஆம் தேதி அறிவிக்கப்படும். அன்றைய தினம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்சும் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

“அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான்”-  திண்டுக்கல் சீனிவாசன்

இந்நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுகவைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் போட்டி கிடையாது. அடுத்த ஆட்சி அதிமுக தான். அடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தான். வேட்பாளர் யார் என்பதனை முதல்வர் விரைவில் அறிவிப்பார்கள்” எனக் கூறினார். முதலமைச்சர் நடத்திய கூட்டத்தில் துணை முதலமைச்சர் கலந்து கொள்ளாதது குறித்து கேட்ட கேள்விக்கு, “வேலையின் காரணமாக முதல்வர் நடத்திய கூட்டத்திற்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் வரவில்லை. துணை முதல்வருக்கு தெரிந்துதான் கூட்டம் நடைபெறுகிறது” என தெரிவித்தார்.