மக்களுடைய பணத்தை மக்களுக்கு வழங்குகிறோம்! அவ்வளவுதான்- திண்டுக்கல் சீனிவாசன்

 

மக்களுடைய பணத்தை மக்களுக்கு வழங்குகிறோம்! அவ்வளவுதான்- திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து நானோ எங்க அமைச்சர்களோ யார் எது சொன்னாலும் எடுத்து கொள்ளாதிங்க, கடைசியாக கட்சியின் முதல்வர், துணை முதல்வர் அதிமுகவின் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இவர்கள் சொல்வது தான் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள். ஏற்கனவே கூறியாச்சு கட்சியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என அதிகார பூர்வமாக அறிவித்து முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

மக்களுடைய பணத்தை மக்களுக்கு வழங்குகிறோம்! அவ்வளவுதான்- திண்டுக்கல் சீனிவாசன்

பிஜேபிக்கும் அதிமுக கூட்டணிக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது.
இதுவரை ஸ்டாலின், அதிமுகவின் திட்டங்கள் ஏதாவது ஆதரித்து உள்ளாரா? ஸ்டாலின் சொல்வதை எல்லாம் அதிமுக எடுத்து கொள்ளாது. பொதுமக்கள் அன்னப்பறவை போல… எது நியாயம் எது அநியாயம் என தெரிந்து கொள்வார்கள். இரண்டு முறை அதிமுகவுக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளார்கள். மூன்றாவது முறை அதிமுக வெற்றி பெறும். தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். மக்களுடைய பணத்தை மக்களுக்கு வழங்கிறோம் என தெரிவித்தார்.

ஒவ்வொருவருக்கும் அவர்களது உடல்நிலை முக்கியம் நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்க வில்லை என தெரிவித்துள்ளார். இதனை நான் வரவேற்கிறேன். இதில் அரசியல் பண்ண வேண்டிய அவசியம் இல்லை என்னுடைய கருத்து” எனக் கூறினார்.