திண்டுக்கல்- அரசு கல்லூரி அமைக்கக் கோரி ஆட்சியரிடம், பள்ளி மாணவர்கள் மனு

 

திண்டுக்கல்- அரசு கல்லூரி அமைக்கக் கோரி ஆட்சியரிடம், பள்ளி மாணவர்கள் மனு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி நேற்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நத்தம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் வருகை புரிந்தனர். அப்போது, ஆட்சியர்

திண்டுக்கல்- அரசு கல்லூரி அமைக்கக் கோரி ஆட்சியரிடம், பள்ளி மாணவர்கள் மனு

விஜயலட்சுமியிடம் தங்கள் பகுதியில் அரசு கல்லூரிகள் இல்லாததால் உயர் படிப்பிற்காக திண்டுக்கல், மதுரை, மேலூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டி நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் ஏழை எளிய மாணவர்கள் 12ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர். எனவே, நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியை அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.