தனியார் பள்ளி மேலாளர் கடத்திக்கொலை; மயானத்தில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்

 

தனியார் பள்ளி மேலாளர் கடத்திக்கொலை; மயானத்தில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தனியார் பள்ளி மேலாளர் கடத்திக்கொலை செய்யப்பட்டு, மயானத்தில் நிர்வாண நிலையில் சடலம் விட்டுச்செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (48). இவர் திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த 4ஆம் தேதி வேலைக்கு சென்ற மணிகண்டன், பின்னர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. இதனால், அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

தனியார் பள்ளி மேலாளர் கடத்திக்கொலை; மயானத்தில் நிர்வாணமாக மீட்கப்பட்ட சடலம்

இந்த நிலையில் இன்று காலை திண்டுக்கல் ஆர்.எம்காலனி சாலையில் உள்ள மின் மயானம் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரத்த காயங்களுடன் நிர்வாண நிலையில் கை, கால்கள் கட்டப்பட்டு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில்
சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்டது மணிகண்டன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.