கிராவல் மண் அள்ள அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

 

கிராவல் மண் அள்ள அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராவல் மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்க கோரி, மாவட்ட ஆட்சியரிடம், கிராவல் மண் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று கோரிக்கை மனுவை அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த சங்கத்தின் நிர்வாகிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் கிராவல் மண் அள்ளுவதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்ததால், அதை நம்பி பிழைப்பு நடத்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும், லாரி உரிமையாளர்களும் கடுமையாக

கிராவல் மண் அள்ள அனுமதி கோரி ஆட்சியரிடம் மனு

பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே பொதுமுடக்கம் காரணமாக தாங்கள் வேலையின்றி தவித்து வந்த நிலையில், தற்போது தொழில் செய்ய தொடங்கும்போது பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த தடையால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால், பண்டிகைக் காலத்தில் வருமானம் இன்றி தவித்து வரும் தொழிலாளர்களின் நலன் கருதி, கிராவல் மண் அள்ள அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுகொண்ட அவர்கள், தங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்ததாகவும் தெரிவித்தனர்.