கொரோனா குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

 

கொரோனா குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நத்தம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கரிசல் கலைக்குழுவினர் கொரோனாவை தடுப்பது குறித்தும், முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.