கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

 

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே கல் குவாரி குட்டையில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டம் சீரங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பெருமாள். இவருக்கு கண்ணன்(16) மற்றும் குமார் (7) என்ற இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கண்ணன், நேற்று மாலை தனது தம்பி உள்ளிட்ட சிறுவர்களுடன், அருகில் உள்ள வீரயப்பட்டி கல்குவாரிக்கு குளிக்க சென்றுள்ளார்.

கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

அனைவரும் நீரில் இறங்கி குளித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற கண்ணன் திடீரென நீரில் மூழ்கி மாயமாகினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மீட்கும் பணியில் ஈடபட்டனர். மேலும், இது குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் மாயனூர் மற்றும் குஜிலியம்பாறை தீயணைப்பு நிலையங்கல் இருந்து வந்த வீரர்கள் குட்டையில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணிநேர தேடலுக்கு பின்னர் சிறுவன் உயிரிழந்தை நிலையில் சடலமாக மீட்டனர். தொடர்ந்து, மாயனூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்வம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.