நிலத்தை மீட்டுத்தரக் கோரி இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

 

நிலத்தை மீட்டுத்தரக் கோரி இளம்பெண் தீக்குளிக்க முயற்சி

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம்
வடமதுரை அருகேயுள்ள இ.சித்தூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி மனைவி குஷ்பூ (28). நேற்று தனது மகள் மற்றும் தாயாருடன் திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த அவர், திடீரென கைப்பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி

தீக்குளிக்க முயன்றார்.பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது, தன்னுடைய நிலத்தை போலி ஆவணம் மூலம் ஒருவர் அபகரிக்க முயற்சி செய்வதாகவும், இதற்காக நிலத்தை அளவீடு செய்ய வருவதாகவும் கூறினார். மேலும் தனது நிலத்தை மீட்டு தரும்படியும், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து, அவரை எஸ்.பி., ரவளி பிரியாவிடம் போலீசார் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.