திண்டுக்கல்- சிபிசிஐடி விசாரணை கோரி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

 

திண்டுக்கல்- சிபிசிஐடி விசாரணை கோரி ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்துகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணை கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்த வழக்கை தமிழக போலீசார் முறையாக கையாளவில்லை என்று குற்றம்சாட்டினார். மேலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் தேர்வான உள்ளாட்சி தலைவர்களை பணிசெய்ய விடாமல் தடுக்கும் ஆளும் கட்சியினர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்