தினமலர் நாளிதழை தீயிட்டு எரித்த தேமுதிக தொண்டர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு

 

தினமலர் நாளிதழை தீயிட்டு எரித்த தேமுதிக தொண்டர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோரை கேலி செய்யும் விதமாக கார்டூன் வெளியிட்டதாக தினமலர் நாளிதழுக்கு எதிராக, அந்த கட்சி நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தினமலர் நாளிதழ் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, காவல்நிலையங்களில் புகார் அளித்தனர். மேலும் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பாக தினமலர் நாளிதழிலை எரித்து தேமுதிக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் நாளிதழை தீயிட்டு எரித்த தேமுதிக தொண்டர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு

இந்நிலையில் வாணியம்பாடி காவல் நிலையம் முன்பு இன்று காலை தினமலர் நாளிதழை தீயிட்டு எரித்த தேமுதிக தொண்டர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேமுதிக வாணியம்பாடி நகர செயலாளர் சங்கர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடதக்கது.