சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

 

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் சார்பில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. ஆம்பூர் பெத்லேகேம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த இந்த கூட்டத்தில், திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி, சோளிங்கர் முன்னால் எம்எல்ஏ பார்த்திபன், மகளிர் அணி செயலாளர் ஜெயந்தி பத்மநாபன் , அமமுக பொருளாளர் மனோகரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து அமமுக நிர்வாகிகள் ஆலோசனை

இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பிரசார வியூகம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.