’டிக்டாக்’ கின் முக்கிய அதிகாரி பதவி விலகல்

 

’டிக்டாக்’ கின் முக்கிய அதிகாரி பதவி விலகல்

டிக்டாக் போல குறுகிய காலத்தில் புகழ்பெற்ற ஆப் எதுவும் இருக்க முடியாது. அந்தளவுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்களால் டவுண்லோடு செய்யப்பட்டது.

டிக்டாக் எனும் ஆப் பலரின் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. தனக்குப் பிடித்த நடிகர்களின் பாடலை, டான்ஸை சோஷியல் மீடியால் ஷேர் செய்துகொண்டிருந்த ரசிகர்கள், தாங்களே பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி வீடியோ வெளியிடும் வாய்ப்பை அளித்தது டிக்டாக்.

’டிக்டாக்’ கின் முக்கிய அதிகாரி பதவி விலகல்

இந்தியாவுக்கு சீனாவுடனான எல்லைப் பிரச்னை தொடர்பாக எழுந்த பிரச்னையில் டிக்டாக் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட சீன நிறுவன ஆப்களை தடை செய்தது இந்தியா.

அமெரிக்காவிலும் டிக்டாக் ஆப்க்கு தடை விதிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்க ரகசியங்களை சீன நிறுவனத்திற்கு அளிப்பதாகக் குற்றச்சாட்டை அது முன் வைத்தது. அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ரஷ்யா தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

’டிக்டாக்’ கின் முக்கிய அதிகாரி பதவி விலகல்

அமெரிக்காவின் குற்றசாட்டுகளைக் கடுமையாக மறுக்கிறது டிக்டாக் நிறுவனம். எந்த நிறுவனத்திடமும் பயன்பாட்டாளர்களின் விவரங்களை அளிக்கவில்லை. மற்ற ஆப்களை விடவும் பாதுகாப்பில் மிகுந்த கவனமாக இருக்கிறோம் என்று டிக்டாக் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

’டிக்டாக்’ கின் முக்கிய அதிகாரி பதவி விலகல்

கலிஃபோர்னியாவில் அமெரிக்காவுக்கான டிக்டாக் நிறுவனம் செயல்படுகிறது. அதன் பணியாளர்கள், அமெரிக்க அரசின் முடிவை எதிர்த்து வழக்குப் பதிவுசெய்துள்ளனர். இந்நிலையில் கலிஃபோர்னியா டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் மேயர் பதவி விலகியுள்ளார். இது அந்த நிறுவன ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. தம் பதவி விலகலுக்கு என்ன காரணம் என்பதை தெளிவாக விளக்கவும் இல்லை.

கெவின் மேயர் பதவி விலகலுக்கு ட்ரம்ப் அரசின் அழுத்தம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.