சாலைப் பள்ளத்தால் முதியவர் மரணமா? : சென்னை மாநகராட்சி மறுப்பு!

 

சாலைப் பள்ளத்தால் முதியவர் மரணமா? : சென்னை மாநகராட்சி மறுப்பு!

கோடம்பாக்கம் அருகே சாலை பள்ளத்தில் விழுந்து முதியவர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

சாலைப் பள்ளத்தால் முதியவர் மரணமா? : சென்னை மாநகராட்சி மறுப்பு!

சென்னை கோடம்பாக்கம், மேம்பாலம் அருகே இருக்கும் சாலையில் இருந்த மழை நீர் பள்ளத்தில் தவறி விழுந்து ஓட்டுநர் நரசிம்மன் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அண்மையில் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து தாய், மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து நரசிம்மனின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சாலை முறையாக பராமரிக்கப் படாததால் இது போன்ற சம்பவங்கள் தொடருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

சாலைப் பள்ளத்தால் முதியவர் மரணமா? : சென்னை மாநகராட்சி மறுப்பு!

இந்த நிலையில் நரசிம்மன் சாலை பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவத்துக்கு சென்னை மாநகராட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. நரசிம்மன் பள்ளத்தில் விழுந்ததால் உயிரிழக்கவில்லை என்றும் அவரது மரணத்தில் வேறு காரணம் இருக்கக்கூடும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.