என் வற்புறுத்தலால் குஷ்பு பாஜகவில் இணைந்தாரா? கணவர் சுந்தர்.சி. விளக்கம்!

 

என் வற்புறுத்தலால் குஷ்பு பாஜகவில் இணைந்தாரா? கணவர் சுந்தர்.சி. விளக்கம்!

நடிகை குஷ்பு பாஜகவில் சேர்வதற்கு தான் காரணமில்லை என்று கணவர் சுந்தர்.சி மறுப்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பூ காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜகவில் இணைந்தார். தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தலைமையில் டெல்லி சென்ற அவர் பாஜக தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். குஷ்புவின் இந்த முடிவுக்கு கணவர் சுந்தர்.சி -யின் வற்புறுத்தலே காரணம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

என் வற்புறுத்தலால் குஷ்பு பாஜகவில் இணைந்தாரா? கணவர் சுந்தர்.சி. விளக்கம்!

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள இயக்குநரும், குஷ்புவின் கணவருமான சுந்தர்.சி, எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என்னுடைய துறையே வேறு என்று கூறி மறுப்பு தெரிவித்துள்ளார்.

என் வற்புறுத்தலால் குஷ்பு பாஜகவில் இணைந்தாரா? கணவர் சுந்தர்.சி. விளக்கம்!

இதனிடையே இன்று சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பு, ‘நான் அரசியலுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகிறது. என் கணவருடன் எந்த நிகழ்ச்சியிலாவது பார்த்துள்ளீர்களா? என் அரசியல் முடிவுகளுக்கு சுந்தர்.சி காரணம் என கூறக்கூடாது. அவர்கள் மீது உள்ள கணத்தை மறைக்க இப்படி கூறுகிறார்கள் என்றார்.