ரசிகர்களை குதூகலப்படுத்த மீண்டும் ஐபிஎல் திருவிழா… பரம வைரிகள் மோதும் அட்டகாசமான முதல் போட்டி!

 

ரசிகர்களை குதூகலப்படுத்த மீண்டும் ஐபிஎல் திருவிழா… பரம வைரிகள் மோதும் அட்டகாசமான முதல் போட்டி!

கொரோனா பரவலை மீறி கடந்த ஆண்டு துபாயில் வெற்றிகரமாக ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தி முடித்தது. இம்முறையும் பிசிசிஐக்கு கடும் சவால் காத்திருந்தது. மார்ச் மாதம் வரை அமைதியாக இருந்த கொரோனா, ஐபிஎல் தொடங்கிய ஏப்ரல் மாதத்திலிருந்து இரண்டாம் அலை வேகமெடுத்தது. இதனால் வீரர்கள் அனைவருக்கும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் தொடர்ந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரசிகர்களை குதூகலப்படுத்த மீண்டும் ஐபிஎல் திருவிழா… பரம வைரிகள் மோதும் அட்டகாசமான முதல் போட்டி!

வெற்றிகரமாக பாதி போட்டிகள் நடந்துமுடிந்திருந்த நிலையில் கொரோனா தனது வேலையைக் காட்டியது. அதீத கட்டுப்பாடுகளையும் மீறி பயோ பபுளுக்குள்ளும் கொரோனா நுழைந்தது. வருண் சக்கரவர்த்திக்கு தான் முதன் முதலில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நிலைமை கைமீறி சென்றதை உணர்ந்த பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளைத் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. போட்டிகளைத் தற்காலிகமாகவே நிறுத்திவைத்ததே தவிர முழுவதுமாக ரத்து செய்யப்படும் என எங்கேயும் பிசிசிஐ தெரிவிக்கவில்லை.

ரசிகர்களை குதூகலப்படுத்த மீண்டும் ஐபிஎல் திருவிழா… பரம வைரிகள் மோதும் அட்டகாசமான முதல் போட்டி!

இதனால் எஞ்சிய போட்டிகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வந்தது. குறிப்பாக இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகமாவதால் இங்கே நடத்தப்படாது என திட்டவட்டமாக அறிவித்தார் தலைவர் கங்குலி. இதையடுத்து எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர்-அக்டோபர் மாதத்தில் நடைபெறும் எனவும், விரைவில் அட்டவணை வெளியிடப்படும் என்றும் பிசிசிஐ அறிவித்தது. தற்போது அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டியே அட்டகாசமான போட்டியாக அமைந்துள்ளது.

ரசிகர்களை குதூகலப்படுத்த மீண்டும் ஐபிஎல் திருவிழா… பரம வைரிகள் மோதும் அட்டகாசமான முதல் போட்டி!

ஆம் முதல் போட்டியில் ஐபிஎல் உலகில் பரம வைரிகளான சென்னை அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. அதுவும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 19) தொடங்குகிறது. விடுமுறை நாளில் சென்னை-மும்பை அணிகள் மோதல். இதைக் கேட்கும்போதே ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். எஞ்சிய 31 லீக் போட்டிகள் அக்டோபர் 8ஆம் தேதி முடிவடைகின்றன. அதற்குப் பின் பிளேஆப் போட்டிகள் நடைபெற்று அக்டோபர் 15ஆம் தேதி பைனல் நடைபெறவிருக்கிறது. இதுமுடிந்த அடுத்த 2 நாட்களுக்குப் பின் டி20 உலகக்கோப்பை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.