ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் தோனி!

 

ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் தோனி!

இந்தாண்டு மார்ச் 29 ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டிகள் ஊரடங்கு மற்றும் கொரோனா காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து அனைத்து அணிகளும் அதற்கான பயிற்சிகளை தொடங்க இருக்கிறது. அதன்படி ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த கேப்டன் தோனி உள்ளிட்ட 6 பேர் சென்னைக்கு வருகை தந்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தோனி இன்று சென்னை புறப்பட்டு சென்னை வந்தடைந்துள்ளார். இதனையடுத்து சுரேஷ் ரெய்னாவும் சென்னை வந்தடைந்தார். இவர்களை தவிர கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர். சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்த மாத இறுதியிலேயே துபாய் புறப்படும் என கூறப்படுகிறது.

ஐபிஎல் பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார் தோனி!

ஐபிஎல் பயிற்சி போட்டிக்கான கட்டுப்பாடுகள் என்ன?

  • பயிற்சி நேரம் தவிர்த்து மற்ற அனைத்து நேரங்களிலும் சென்னை அணி வீரர்கள் மாஸ் அணிய வேண்டும்
  • சேப்பாக்கம் மைதானத்தை நிர்வகிக்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்
  • ஹோட்டலில் தனியாக தங்க வைக்கப்படும் வீரர்களை குடும்பத்தினர், வெளிநபர்கள் சந்திக்க அனுமதியில்லை