தருமபுரி அருகே ரயில் மோதி இளைஞர் பலி!

 

தருமபுரி அருகே ரயில் மோதி இளைஞர் பலி!

தருமபுரி

தருமபுரி அருகே விரைவு ரயிலில் அடிபட்டு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (30). இவர் நேற்று தருமபுரி அடுத்த கடகத்தூர் மேம்பாலம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சேலம் நோக்கி சென்ற விரைவு ரயில் ராஜ்குமார் மீது மோதியது.

தருமபுரி அருகே ரயில் மோதி இளைஞர் பலி!

இதில், அவர் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து, ரயில் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது விபத்தா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.