தருமபுரி-ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த 2 ஊழியர்கள் கைது- சிறையில் அடைப்பு

 

தருமபுரி-ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த 2 ஊழியர்கள் கைது- சிறையில் அடைப்பு

தருமபுரி
தருமபுரி மாவட்டத்தில், ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த ஊராட்சி செயலாளர் மற்றும் அவரது நண்பரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி ஊராட்சியின் செயலராக பணியாற்றியவர் கருணாகரன் (51). இவர், கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை போலி ஆவணம், போலி கையெழுத்து மூலம் ஊராட்சி நிதியில் முறைகேடு செய்து வந்துள்ளார். அதற்கு, அவரது நண்பரான பாப்பிரெட்டிப்பட்டி குமார்(41) என்பவர் உதவியாக இருந்துள்ளார்.

தருமபுரி-ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த 2 ஊழியர்கள் கைது- சிறையில் அடைப்பு


இந்த முறைகேடு, பொதுமக்கள் அளித்த குற்றச்சாட்டு அடிப்படையில், விசாரணை நடத்திய பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு அறிக்கை அளித்தார்.
இந்த அறிக்கை அடிப்படையில், நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ஆட்சியர் பரிந்துரை செய்திருந்தார். அதன்பேரில்

தருமபுரி-ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த 2 ஊழியர்கள் கைது- சிறையில் அடைப்பு

விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி கருணாகரன் தலைமையில் ஆய்வாளர் கோமதி, உதவி ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய குழுவினரின் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஊராட்சி செயலர் கருணாகரன் தன் நண்பருடன் இணைந்து ரூ.20 லட்சத்து 14 ஆயிரம் முறைகேடு செய்ததும் தெரிய வந்தது.

தருமபுரி-ஊராட்சி நிதியில் முறைகேடு செய்த 2 ஊழியர்கள் கைது- சிறையில் அடைப்பு


இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களின் வீடுகளில் இருந்து அதிகாரிகளின் பெயரில் பயன்படுத்திய போலி முத்திரைகள், போலி பில்களை பறிமுதல் செய்தனர். இருவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட நிலையில், இருவரையும் மாவட்ட கிளைச் சிறையில் அடைத்தனர்.