லாரியில் கடத்திவரப்பட்ட 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

லாரியில் கடத்திவரப்பட்ட 20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தர்மபுரி

சேலத்தில் இருந்து தர்மபுரிக்கு லாரியில் கடத்திவரப்பட்ட 20 டன் ரேஷன் அரிசியை, வருவாய் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி
கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், தர்மபுரி மாவட்டம் தொப்பூர் சோதனைச் சாவடியில் இன்று காலை நல்லம்பள்ளி வட்டாட்சியர் சரவணன், பறக்கும் படை அதிகாரிகளுடன் இணைந்து வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது, சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி வந்த லாரியை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். லாரி ஓட்டுநர் உட்பட இருவர் ஓட்டம்பிடித்த நிலையில், லாரிக்குள் சுமார் 20 டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, லாரியுடன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள், தர்மபுரி சிவில் சப்ளை குடோனில் சேர்த்தனர். வட்டாட்சியர் சரவணன் புகாரின் பேரில், உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிஓடிய இருவரையும், தேடி வருகின்றனர்.