தருமபுரி அருகே காரில் கடத்திய ரூ.2 லட்சம் கர்நாடக மது பாக்கெட்டுகள் பறிமுதல்!

 

தருமபுரி அருகே காரில் கடத்திய ரூ.2 லட்சம் கர்நாடக மது பாக்கெட்டுகள் பறிமுதல்!

தருமபுரி

தருமபுரி அருகே காரில் கடத்தமுயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான கர்நாடகா மாநில மது பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி நான்கு ரோடு பகுதியில் நேற்று உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக தேன்கனிகோட்டையில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.

தருமபுரி அருகே காரில் கடத்திய ரூ.2 லட்சம் கர்நாடக மது பாக்கெட்டுகள் பறிமுதல்!

அப்போது, காரில் அட்டை பெட்டிகளில் மறைத்து கர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, 4 அட்டை பெட்டிகளில் இருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 1,344 கர்நாடக மது பாக்கெட்டுகளையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காரில் இருந்த 2 நபர்களை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அதில், அவர்கள் கரூர் மாவட்டம் காந்திநகரை சேர்ந்த தியாகு(34) மற்றும் வெங்கமேட்டை சேர்ந்த ஆனந்த் என்பதும், கர்நாடகாவில் இருந்து மது பாக்கெட்டுகளை வாங்கி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து, இருவர் மீது காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.