தர்மபுரி- தேசிய நெடுஞ்சாலையில் காயங்களுடன் ஆண் சடலம்- இறந்து கிடந்தது யார் ? போலீஸ் விசாரணை
Oct 8, 2020, 17:39 IST1602158984000
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இறந்து கிடந்தவரின் வயது சுமார் 55 இருக்கலாம் என்றும், உடலில் காயங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கூறினர். இறந்து கிடந்தவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்கிற விவரம் உடனடியாக தெரியவரவில்லை. அவர் யார் என்பது குறித்தும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.