தர்மபுரி- தேசிய நெடுஞ்சாலையில் காயங்களுடன் ஆண் சடலம்- இறந்து கிடந்தது யார் ? போலீஸ் விசாரணை

 

தர்மபுரி- தேசிய நெடுஞ்சாலையில் காயங்களுடன் ஆண் சடலம்- இறந்து கிடந்தது யார் ? போலீஸ் விசாரணை

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம், பாளையம்புதூர் அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இறந்து கிடந்தவரின் வயது சுமார் 55 இருக்கலாம் என்றும், உடலில் காயங்கள் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

தர்மபுரி- தேசிய நெடுஞ்சாலையில் காயங்களுடன் ஆண் சடலம்- இறந்து கிடந்தது யார் ? போலீஸ் விசாரணை

அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்திருக்கலாம் என போலீசார் கூறினர். இறந்து கிடந்தவர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்கிற விவரம் உடனடியாக தெரியவரவில்லை. அவர் யார் என்பது குறித்தும், அவர் எவ்வாறு இறந்தார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.