தருமபுரியில் உரிய ஆவணமில்லாத ரூ.9.70 லட்சம் பறிமுதல்!
தருமபுரி
தருமபுரி அருகே தனியார் பால் நிறுவன ஊழியரிடம் இருந்து உரிய ஆவணமில்லாத 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட சோகத்தூர் அரசு கல்லூரி அருகே நேற்று தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பாலகோட்டில் இருந்து வந்த காரை மறித்து சோதனையிட்டனர். சோதனையின்போது, காரில் 9 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காரில் வந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் பாலகோட்டை சேர்ந்த தனியார் பால் கொள்முதல் நிறுவன ஊழியர் வினோத் என்பது தெரியவந்தது. வங்கியில் செலுத்த பணத்தை கொண்டுசென்றதாக கூறிய நிலையில், அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, பறிமுதலான பணம் தருமபுரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.