தீராத வயிற்று வலியால், விவசாயி தற்கொலை – போலீசார் விசாரணை

 

தீராத வயிற்று வலியால், விவசாயி தற்கொலை – போலீசார் விசாரணை

தருமபுரி

தர்மபுரி அருகே வயிற்றி வலி காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த பாசரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வேலு. கூலி தொழிலாளியான இவருக்கு, கல்பனா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் வேலுவிற்கு கடந்த சில வருடங்களாக தீராத வயிற்று வலி பிரச்சினை இருந்துள்ளது. இதற்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும், நோய் குணமடைய வில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேலு மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

தீராத வயிற்று வலியால், விவசாயி தற்கொலை – போலீசார் விசாரணை

இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாதபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய கல்பனா, வேலு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை தொடர்ந்து, அவர் மொரப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.