பிறந்தநாளில் மாரடைப்பால் இறந்த தருமபுரி டிஎஸ்பி : சோகத்தில் சக காவலர்கள்!
Sep 21, 2020, 10:19 IST1600663776000
தருமபுரி நகர டிஎஸ்பி ராஜ்குமார் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58.
தருமபுரி டிஎஸ்பி ஆக பணியாற்றி வந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று தனது 58-வது பிறந்தநாளை கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு டிஎஸ்பி ராஜ்குமார் மாரடைப்பால் திடீர் மரணமடைந்தார். பிறந்த நாளிலேயே டிஎஸ்பி இறந்த செய்தி சக காவலர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.