வங்கியில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பதிந்த தருமபுரி ஆட்சியர்!

 

வங்கியில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பதிந்த தருமபுரி ஆட்சியர்!

தருமபுரி

தருமபுரியில் 100 சதவீத வாக்களிப்பது குறித்த ஒட்டுவில்லைகளை, வங்கியில் ஒட்டி மாவட்ட ஆட்சியர் கார்த்திகா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று தருமபுரி இலக்கியம்பட்டி பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் வாக்களிப்பதன் அவசியத்தை குறிக்கும் விதமான ஒட்டு வில்லைகள் பதிக்கும் பணி நடைபெற்றது.

வங்கியில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை பதிந்த தருமபுரி ஆட்சியர்!

இதில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கார்த்திகா கலந்துகொண்டு, வங்கி கிளை மற்றும் ஏடிஎம் மையத்தில் ஒட்டுவில்லைகளை பதிப்பித்தார். தொடர்ந்து, வங்கிக்கு வந்த வாடிக்கையாளர்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர் விநியோகம் செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.