மகளிர் தின விழா- கேக் வெட்டி கொண்டாடிய தர்மபுரி ஆட்சியர்!

 

மகளிர் தின விழா- கேக் வெட்டி கொண்டாடிய தர்மபுரி ஆட்சியர்!

தருமபுரி

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச மகளிர் தின விழா உற்சாகமாக கொண்டாட்டப்பட்டது.

உலகம் முழுவதும் மார்ச் மாதம் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தருமபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கார்த்திகா கலந்துகொண்டு, கேக் வெட்டி, ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மகளிர் தின விழா- கேக் வெட்டி கொண்டாடிய தர்மபுரி ஆட்சியர்!

பின்னர் கூட்டத்தினர் இடையே பேசிய அவர், மகளிர் தினம் கொண்டாடும் இந்த நாளில், ஜனநாயக திருவிழாவான தேர்தலில் அனைத்து மகளிரும் பங்கேற்று 100 சதவீதம் வாக்களிக்க உறுதியேற்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், ஓட்டுக்கு பணம் பெறுவதை அனைவரும் தவிர்க்க வலியுறுத்த வேண்டுமென ஆட்சியர் கார்த்திகா கூறினார்.

இதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், 100-க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.