சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை – கணக்கில்வராத ரூ.42,280 பறிமுதல்

 

சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை – கணக்கில்வராத ரூ.42,280 பறிமுதல்

தர்மபுரி மாவட்டம்

பாலக்கோடு சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நடராஜ் தலைமையில் நடந்த இந்த சோதனையில், கணக்கில்வராத 42 ஆயிரத்து 280 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சார்பதிவாளர் சரவணன், இளநிலை உதவியாளர் தென்தமிழ், இடைத்தரகர் மாதேஷ் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.