நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
Nov 12, 2020, 17:17 IST1605181673000
தருமபுரி
தர்மபுரி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்தி வரும் திடீர் சோதனையால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மற்றும் தரக்கட்டுப்பாடு அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இங்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலின் பேரில்,. டிஎஸ்பி கிருஷ்ணராஜன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அலுவலக ஊழியர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்து வரும் இந்த சோதனையின்போது ஊழியர் ஒருவரிடம் இருந்து கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.