விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Oct 26, 2020, 17:11 IST1603712486000
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் வயிற்று வலி காரணமாக விஷ கிழங்கை சாப்பிட்ட முதியவர், சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பென்னாகரம் வட்டம் ஏரியூரை அடுத்த மூலபெல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மாதையன்(70). இவர் தனது மகன் விக்னேஷ் என்பவருடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மாதையனுக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் கடந்த 23-ஆம் தேதி
மாதையன் விஷ கிழங்குகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். மயங்கி கிடந்தவரை மீட்ட குடும்பத்தார் பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.