வயிற்று வலி – 10ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
Nov 1, 2020, 12:08 IST1604212718000
தர்மபுரி
தர்மபுரி அருகே வயிற்று வலி காரணமாக 14 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த பெரியபூலாப்பட்டியை சேர்ந்த துரை என்பவரது மகள் கீர்த்தி(14).
அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவருக்கு, அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில், கீர்த்தி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனை தாங்க முடியாத சிறுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பணி முடிந்து வீடு திரும்பிய அவரது தாயார், மகள் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதார். இது பார்ப்போரை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் தொடர்பாக காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.