குடும்ப தகராறில் பெண் விஷம் குடித்து தற்கொலை
Oct 25, 2020, 12:09 IST1603607989000
தர்மபுரி
தர்மபுரி அருகே குடும்ப தகராறில் பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பென்னாகரம் வட்டம் பெரும்பாலை அடுத்த வட்டக்கொரக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி பெருமாள். இவரது மனைவி சிந்து(47). தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று
வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த சிந்துவை உறவினர்கள் மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் சிந்து ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் குமரேசன் அளித்த தகவலின் பேரில் பெரும்பாலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், குடும்ப தகராறு காரணமாக சிந்து விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.