தர்மபுரி- டயர் வெடித்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்

 

தர்மபுரி- டயர் வெடித்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்

தர்மபுரி

தர்மபுரி அருகே ஆரஞ்சு பழங்களை ஏற்றிச்சென்ற பிக்-அப் வேனின் டயர் வெடித்ததில், அந்த வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
ஓசூரில் இருந்து இரண்டரை டன் ஆரஞ்சு பழங்கள் அடங்கிய பெட்டிகளை ஏற்றிக் கொண்டு பிக்-அப் வாகனம் ஒன்று மதுரை நோக்கி சென்றுள்ளது. வண்டியை ஓசூர் அடுத்த தொரப்பள்ளியைச் சேர்ந்த தமிழரசு(27) என்பவர் ஓட்டிசென்றார். அவருடன் வண்டியின் உரிமையாளர் கந்தகுமார்(30) மற்றும் உதவியாளர் ஹரீஷ்(23) ஆகியோரும் சென்றனர்.

தர்மபுரி- டயர் வெடித்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்

தர்மபுரியை அடுத்த நல்லாம்பட்டி அருகே சென்றபோது வேனின் பின்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் வேன் ஒட்டுநர்

தர்மபுரி- டயர் வெடித்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பிக்-அப் வேன்

உள்ளிட்ட மூவரும் காயங்களுடன், உயிர் தப்பினர். அருகில் இருந்தவர்கள் மூவரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்,