தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்ததில் விவசாயி பலி

 

தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்ததில் விவசாயி பலி

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாம்பு தீண்டியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மொரப்பூர் அடுத்த தாசரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (58). இவர் நேற்று மாலை தனது வீட்டின் அருகேயுள்ள விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, அவரது கால் பாதத்தில் சுருக்கென ஏதோ கடித்துள்ளது.

தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்ததில் விவசாயி பலி

இதனால் அவர் வலியால் துடித்ததை அறிந்த உறவினர்கள் அங்கு சென்ற பார்த்தபோது, புதர் மறைவில் பாம்பு போன்ற உயிரினம் சென்றதை பார்த்துள்ளனர். இதனையடுத்து, உடனடியாக அவரை அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை

தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்ததில் விவசாயி பலி

அளித்த மருத்துவர்கள், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி சீனிவாசனின் மனைவி சென்னம்மாள் அளித்த தகவலின் பேரில் மொரப்பூர் போலீஸார்
விசாரணை நடத்துகின்றனர்.