தர்மபுரி- மாயமான முதியவரை கண்டுபிடிக்க கோரி போலீசில் புகார்
Oct 17, 2020, 16:09 IST1602931159000
தர்மபுரி
தர்புமரி அருகே 6 மாதங்களுக்கு முன்பு மாயமான முதியவரை கண்டுபிடித்துத் தரக்கோரி உறவினர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட வெங்கட்டம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜவேலு(60). கடந்த ஏப்ரல்
மாதம் வீட்டில் இருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. உறவினர்கள் வீடுகள் உட்பட பல்வேறு இடங்களில் தேடியும் குடும்பத்தினர் தேடியும் கிடைக்காத நிலையில், ராஜவேலுவை கண்டுபிடித்துத் தரக்கோரி அவரது மனைவி ருக்குமணி, அதியமான்கோட்டை
காவல்நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதியவர் ராஜவேலுவை தேடி வருகின்றனர்.