10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தந்தை போக்சோ சட்டத்தில் கைது

 

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தந்தை போக்சோ சட்டத்தில் கைது

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.
பாலக்கோடு காரிமங்கலம் அருகே தொண்ணையன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சண்முகம்(35). இவருக்கு தனலெட்சுமி என்ற

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தந்தை போக்சோ சட்டத்தில் கைது

மனைவியும், 10 வயது சிறுமி உட்பட 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக தனலெட்சுமி தனது மகளுடன், தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னுடன் வசித்து வந்த 10 வயது மகளுக்கு, சண்முகம் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பாலியல் தொல்லை அளித்து

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தந்தை போக்சோ சட்டத்தில் கைது

வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி, தனது தாய் தனலெட்சுமியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தனலெட்சுமி அளித்த புகாரின் பேரில் சண்முகம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காரிமங்கலம் போலீசார், அவரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.