எல்.முருகன் பேனர் கிழிப்பு… தாராபுரத்தில் போலீஸ் குவிப்பு!

 

எல்.முருகன் பேனர் கிழிப்பு… தாராபுரத்தில் போலீஸ் குவிப்பு!

தாராபுரத்தில் வைக்கப்பட்ட எல்.முருகன் பேனரை அடையாளம் தெரியாத நபர்கள் கிழித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எல்.முருகன் பேனர் கிழிப்பு… தாராபுரத்தில் போலீஸ் குவிப்பு!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக ,பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் நாகர்கோவில், கோவை மேற்கு ,மொடக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிட்ட திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். திமுக சார்பில் நிறுத்தப்பட்ட கயல்விழி அவரைவிட ஆயிரத்து 393 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

எல்.முருகன் பேனர் கிழிப்பு… தாராபுரத்தில் போலீஸ் குவிப்பு!

இந்நிலையில் தாராபுரம் தொகுதியில் எல்.முருகனுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாஜக சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதை மர்ம நபர்கள் சிலர் கிழித்தெறிந்து உள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர் . இதனிடையே எல்.முருகனுக்கு ஆதரவாக வைக்கப்பட்ட பேனர் அருகிலேயே திமுகவினர் நன்றி பேனரும் வைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.