ஊரடங்கு தடையை மீறி ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

 

ஊரடங்கு தடையை மீறி ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பொழுதுபோக்கு இடங்கள், கோயில்கள் மூடப்பட்டன. இருப்பினும் இன்று  ஆடி மாதம் துவங்கி இருப்பதால் கோயில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

ஊரடங்கு தடையை மீறி ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்!

இதனிடையே  விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் வளாகத்தில் வரும் 24 ஆம் தேதி தங்கத்தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இன்றி தங்கத்தேர் இழுக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதியளித்தார்.

இந்நிலையில் 9 நாள் ஆடிப்பூர திருவிழா ஆண்டாள் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி பக்தர்கள் அங்கு குவிந்தனர். பக்தர்களுக்கும் அனுமதி என வதந்தி பரவியதை அடுத்து பக்தர்கள் கோயிலுக்கு வந்துள்ளனர். இருப்பினும் அங்கு போதிய அளவில் போலீசார் பாதுக்காப்பு பணியில் இல்லாதது கவனிக்கத்தக்கது.