இன்று முதல் கோயில்கள் திறப்பு; பக்தர்களுக்கு அனுமதி!

 

இன்று முதல் கோயில்கள் திறப்பு; பக்தர்களுக்கு அனுமதி!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இன்று முதல் கோயில்கள் திறப்பு; பக்தர்களுக்கு அனுமதி!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் மேலும் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். கொரோனா பரவலை அடிப்படையாகக் கொண்டு மூன்று வகையாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர் ,ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ,தஞ்சாவூர், திருவாரூர் ,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, முதல் வகையாகவும், அரியலூர், கடலூர் ,தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி ,கன்னியாகுமரி ,கிருஷ்ணகிரி, மதுரை ,பெரம்பலூர், புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ,சிவகங்கை, தேனி ,திருநெல்வேலி ,திருவள்ளூர் ,திருவண்ணாமலை, தூத்துக்குடி ,திருச்சி, விழுப்புரம், வேலூர் ,மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்கள் வகை இரண்டிலும், சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வகை மூன்றிலும் இடம் பெற்றிருந்தன.

இன்று முதல் கோயில்கள் திறப்பு; பக்தர்களுக்கு அனுமதி!

இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் வழிபாட்டு தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள், தர்காக்கள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டு தலங்களும் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று அர்ச்சனை, திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை’ என்றும் தமிழக அரசு தனது அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது.