புதுச்சேரியில் மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு!
Jul 30, 2020, 12:10 IST1596091239000
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை15,83,792 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 10.20 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,968 ஆக அதிகரித்துள்து என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது . இந்தியாவில் 24 24 மணிநேரத்தில் 52,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 775 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அங்கு மேலும் 122 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 3,293 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் 114, காரைக்காலில் 8 பேர் என புதிதாக 122 பேருக்கு இன்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. புதுச்சேரியில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,292 ஆக உள்ள நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,953 ஆகவும் உயிரிழப்பு 48 ஆகவும் உள்ளது.