‘சிறுவனின் போலீஸ் கனவு’ பிறந்தநாளன்று சர்பிரைஸ் கொடுத்த துணை ஆணையர்!

 

‘சிறுவனின் போலீஸ் கனவு’ பிறந்தநாளன்று சர்பிரைஸ் கொடுத்த துணை ஆணையர்!

ஐபிஎஸ்- ஆக வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் கனவை அடையாறு துணை ஆணையர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் பெற்றோருடன் வசித்து வரும் சிறுவன் ஹரிஷ்(4). இவருக்கு தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அடிக்கடி இதனை ஹரிஷ் தனது பெற்றோர்களிடம் தெரிவித்துக் கொண்டே இருந்துள்ளனர். சிறுவனின் இந்த ஆசை அடையாறு துணை ஆணையர் விக்ரமனின் கவனத்துக்கு எட்டியுள்ளது.

‘சிறுவனின் போலீஸ் கனவு’ பிறந்தநாளன்று சர்பிரைஸ் கொடுத்த துணை ஆணையர்!

நேற்று ஹரிஷின் பிறந்தநாளையொட்டி, சிறுவனின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு காவல்நிலையத்துக்கு அழைத்த துணை ஆணையர், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். ஹரிஷின் பெற்றோர் சிறுவனுக்கு போலீஸ் உடை அணிவித்து அழைத்து சென்ற நிலையில், பேருந்து நிலையத்திலேயே கேக் வேண்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். இது சிறுவனை பெரும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

‘சிறுவனின் போலீஸ் கனவு’ பிறந்தநாளன்று சர்பிரைஸ் கொடுத்த துணை ஆணையர்!

4 வயதிலேயே காவலர்களின் பாராட்டை பெற்ற ஹரிஷின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த துணை ஆணையர் விக்ரமன், ஹரிஷ் நிச்யமாக ஐபிஎஸ் ஆவார் என குறிப்பிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது வைரல் ஆகி பாராட்டை பெற்றுள்ளது.