“ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக” – ஓபிஎஸ்

 

“ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக” – ஓபிஎஸ்

திமுகவின் உண்மை முகம் தெரிந்து தான் ஆட்சி அதிகாரத்தை திமுகவிடம் கொடுக்காமல் மக்கள் தண்டித்துள்ளனர் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

“ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக” – ஓபிஎஸ்

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக – திமுக என தமிழகத்தின் பிரதான கட்சிகள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக திமுக ஆளும் அதிமுக குறித்து பல புகார்களை முன்வைத்து வருகிறது. அதிமுக அரசு ஊழலில் திளைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள திமுக, ஆளுநரிடம் 90 பக்க ஊழல் புகாரையும் அளித்தது.

“ஊழல் வரலாற்றில் உலக அளவில் இடம் பிடித்த ஒரே கட்சி திமுக” – ஓபிஎஸ்

இந்நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “பஞ்சபூதத்தில் ஊழல், கட்டப்பஞ்சாயத்து , நில அபகரிப்பு என மக்கள் உடமைகளை ஈவு இரக்கமின்றி பறிக்கும் கட்சி திமுக தான். தமிழ் நாட்டில் ஊழலை அறிமுகம் செய்ததும் இந்த திமுக தான் .ஒவ்வொரு முறை அதிகாரத்திற்கு வரும் போதும் ஒவ்வொரு விதமான ஊழல். உலக அளவில் ஊழல் வரலாற்றில் இடம் பிடித்த ஒரே கட்சியும் ஆட்சியும் திமுக தான்.

திமுகவினர் எங்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை .தண்டனை அனுபவிக்க வில்லை. விவாதிக்க தயாரா ? என்று பயத்தில் நடுங்கி உணர்வார்கள் .நெருப்பில்லாமல் புகையாது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பட்டியலிட்ட ஊழல் புகார்களால் 13 ஆண்டுகள், அலைக்கற்றை ஊழலால் 10 ஆண்டுகள் என 23 ஆண்டுகள் ஆட்சி அதிகாரத்தை கொடுக்காமல் மக்கள் திமுகவை தண்டித்துள்ளனர்; இனியும் தண்டிப்பார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.