மூன்றாம் முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.. அடித்துச் செல்லும் ஓபிஎஸ்

 

மூன்றாம் முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.. அடித்துச் செல்லும் ஓபிஎஸ்

தமிழகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடந்த அந்த நாள் வந்து விட்டது. 234 தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கொரோனா காலகட்டத்தில், இக்கட்டான சூழலில் தேர்தல் நடைபெறுவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் அனைவரும் தங்கள் கடமைகளை செவ்வனே செய்துக் கொண்டிருக்கின்றனர்.

மூன்றாம் முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.. அடித்துச் செல்லும் ஓபிஎஸ்

இந்த நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் பெரியகுளம் செவன்த் டே பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.

மூன்றாம் முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்.. அடித்துச் செல்லும் ஓபிஎஸ்

வாக்களித்து விட்டு வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுக மீண்டும் வெற்றி பெறும். மூன்றாம் முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என உறுதியுடன் தெரிவித்தார்.

முன்னதாக அதிமுக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஓ.எஸ். மணியன், ஆர்.பி.உதயகுமார், செங்கோட்டையன், சபாநாயகர் தனபால், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அவரவர் தொகுதிகளில் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.