போலி இ-சேவை மையத்திற்கு வருவாய் துறையினர் சீல்

 

போலி இ-சேவை மையத்திற்கு வருவாய் துறையினர் சீல்

திருப்பத்தூர் அருகே செயல்பட்டு வந்த போலி இ-சேவை மையத்திற்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல்வைத்தனர். திருப்பத்தூர் அடுத்த மிட்டூர் பகுதியில் செயல்பட்டு வந்த கணினி மையத்தில் இ-சேவை மையம் என்று கூறி, ஆன்லைனில் பட்டா மாற்றம், சான்றிதழ்கள் பெற்றுத் தருவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதற்காக, அதிகளவு பணம் பெற்றுகொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் இன்று கணினி மையத்தில் வருவாய்த் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, உரிய அனுமதியின்றி இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கணினி மையத்திற்கு அதிகாரிகள் சீல்வைத்தனர்.

போலி இ-சேவை மையத்திற்கு வருவாய் துறையினர் சீல்