ஈரோட்டில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு… நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

 

ஈரோட்டில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு… நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

ஈரோடு

ஈரோடு மாநகர் பகுதியில் சிறுமி உட்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளில் மாநகராட்சி தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக 60 வார்டுகளில் உள்ள வீடுகளில் தனித்தனியாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு வீடாக சென்று ஆய்வு செய்து வருகின்றனர். பொதுமக்களிடம் வீடுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், குறிப்பாக வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும் அறிவுரை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு மாநகர் வெட்டுகட்டுவலசில் சிறுமி ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோல், அன்னை சத்யா நகரில் வெளியூரிலிருந்து வந்த பெண் ஒருவருக்கும் டெங்கு காய்ச்சலை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், மாநகர நல அலுவலர் முரளி சங்கர் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். மாநகராட்சி சார்பில் 2 இடங்களிலும் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அங்கு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள 400 வீடுகளை சேர்ந்தவர்களுக்கு காய்ச்சல், சளி உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டது.

ஈரோட்டில் சிறுமி உள்பட 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு… நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:- தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வீடுகளில் பழைய பொருட்களில் தண்ணீர் தேங்கி கொள்ளாத அளவு பார்த்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் இருக்கும் குடங்களை மூடி வைத்திருக்க வேண்டும். திறந்தவெளியில் தண்ணீர் இருந்தால் கொசுக்கள் உற்பத்தியாகி அதன் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.

வெட்டுகட்டு வலசு பகுதியில் சிறுமி ஒருவருக்கும், சத்யா நகரில் தன் ஒருவருக்கும் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தற்போது சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நலமாக உள்ளனர். 2 பகுதியிலும் உள்ள 400 வீடுகள் சேர்ந்தவர்களுக்கு சளி, காய்ச்சல் உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில் யாருக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. மழைக் காலம் நெருங்கி வருவதால், மக்கள் வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.