திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Oct 24, 2020, 19:49 IST1603549167000
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை கண்டித்து, திருப்பத்தூரில் அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் எனும் நூலை தடை செய்ய வேண்டுமென அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் கைதுசெய்தனர்.