நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திருச்சியில் முஸ்லிம் லீக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

 

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி  திருச்சியில் முஸ்லிம் லீக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் திருச்சி பாலக்கரை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி  திருச்சியில் முஸ்லிம் லீக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

இந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக ஆசிரியர் சபரிமாலா கலந்துகொண்டு நீட்தேர்வுக்கு எதிராக சிறப்புரை ஆற்றினார். பின்னர் நீட் தேர்வு காரணமாக தமிழக மாணவர்களுடைய கல்வி உரிமை பறிக்கப்படுகிறது. மாணவர்களின் மருத்துவ கனவு பறிபோகிறது. அதனால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டுப்படுகிறார்கள். எனவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி  திருச்சியில் முஸ்லிம் லீக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் களத்தில் இறங்கி போராடி நீட் தேர்வை ரத்து செய்ய ஆவன செய்ய வேண்டும் என்றும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை திரும்பப் பெற்றால் மட்டுமே மாணவர்களின் கல்வி உரிமை பாதுகாக்கப்படும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி  திருச்சியில் முஸ்லிம் லீக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்